Wednesday, April 27, 2011

முதலாளித்துவ ஜனநாயகம் என்பது ஒரு மாபெரும் சமநிலை

 இந்த ஜனநாயகத்துக்குப் பதிலாக எங்கெல்லாம் வன்முறைப்போக்கு உள்ளதோ அங்குதான் இன்று நாட்டின் மோசமான வறுமையும் தேக்கநிலையும் நிலவுகிறது. வடகிழக்கு மாநிலங்களும் வங்கமும் உதாரணம். வன்முறை அரசியல் இருந்தபோது இருண்டு தேங்கிக்கிடந்த நிலப்பகுதிகள் அந்த வன்முறையில் இருந்து மீண்டு இந்த ஊழல்மிக்க ஜனநாயகத்துக்கு வந்தபோதே பெரும் வளர்ச்சியைக் கண்டன என்பதும் யதார்த்தம்.
ஆகவே வன்முறை அரசியல் என்பது வறுமைக்கும் தேக்கநிலைக்கும் தீர்வல்ல. அந்த பிரச்சினைகளை அது மேலும் விரைவுபடுத்தவே செய்யும். அந்த மக்களை வன்முறையாளர்களின் அடிமைகளாக்கி வைக்கும். அவர்களின் அரசியல் ஆசைகளும் பொருளியல் இலக்குகளும் கருகிப்போகும்.
காரணம் வன்முறை அரசியல் அந்தமக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து தொடங்கினாலும்கூட அந்த வன்முறைக்கு நிதியளித்து வளர்க்கும் புறச்
சக்திகளின் இச்சைப்படியே இயங்கும். அவர்களுக்கு இந்த மக்களைப்பற்றி உண்மையான அக்கறை ஏதும் இருப்பதில்லை. அவர்களின் நோக்கு உலக ஆதிக்கத்தில் முதன்மைபெறுவது. அதற்காக இந்தியாவைப் பின்னுக்கிழுப்பது


for more  http://www.jeyamohan.in/?p=10845 

No comments:

Post a Comment