Wednesday, August 29, 2018

.. that's flying

And Gliding :



*EFFORT OUTSIDE ,*

        *INSIDE       EFFORTLESS*






உண்மையான ஆன்மீகமும் வாழ்க்கையும் ஒன்று தான் . ஜீவ முக்தி என்பது இயற்கையான நிலை ,.




மனோலயம் கலைந்து மனோலயநாசம் ஏற்படுவதே இயற்கையானது. மனோலயம் முக்கியத்துவம் பெறும்போது அது போராட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றது.
-பாகவத்  அய்யா






நீங்கள் தியானத்தன்மை கொண்டவராக மாறும்போது அமைதி மற்றும் பேரானந்தம் உங்கள் இயல்பாகவே இருக்கும். சத்குரு




you are          THE PRESENCE     -   -  is  the ONLY truth


அத்வைதத்தின் கொள்கைப்படி ஆளுமை [personality] என்று ஒன்று இல்லை. அது ஐரோப்பாவில் மக்களை மந்தைகளாக்கிய கிறித்தவத் திருச்சபையின் ஆன்மீகசர்வாதிகாரத்தை மீறி தனிமனித உரிமையை கோரியவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கருதுகோள். அந்த மக்களால் நாநூறு வருடங்களாக நம்பப்பட்டு ஏற்கப்பட்ட ஒன்று, அவ்வளவுதான்.

அத்வைதிக்கு நான் என்பது அகங்காரம் அல்லது மமகாரம் [தன்னிலை] மட்டுமே. அது ஒர் இருப்பு அல்ல. நிலை அல்ல. கட்டமைப்பு அல்ல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. அது இடத்துக்கு ஏற்ப தருணத்திற்கு ஏற்ப மாறக்கூடியது. ‘நான் இதுதான்’ என எண்ணுவதே மாயை. ’நான் இவ்வாறு இங்கே இருக்கிறேன்’ என்றே அத்வைதி எண்ணுவான்.

ஆகவே தன் அக இருப்பைப் பலவாக பிரித்துக்கொள்ள, பல தளங்களுடன் அதை இணைத்துக்கொள்ள அவனால் முடியும். இரும்புச்சிலைபோல தன்னைச் சுமந்தலையமாட்டான். காற்றுப்போல, நெருப்புப்போல கால – இடத்தில் தன்னை நிகழ்த்திக்கொள்வான். மேகம்போன்ற வடிவம் கொண்டதாக இருக்கும் அவன் அகம்.

உண்மையில் நாம் அனைவரும் இயல்பாக அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம். சிறுகுழந்தைகள் அப்படித்தான் இருக்கின்றன. கல்வி கற்கும் தோறும்தான் அகங்காரம் இறுகி, மெல்ல நம் தன்னிலையை ஓர் ஆளுமையாக உருவகித்துக் கொள்கிறோம். குறிப்பாக ஐரோப்பியக் கல்வி நம்மை நான் என நம்பச் செய்கிறது. தனிமனிதன் [individual ] என்ற சொல்லை அது சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதன் மூலம் நாம் நமக்கென ஒரு நானை உருவாக்கிக் கொள்கிறோம். அதன்பின் அதை பேணி வளர்க்கும் பொறுப்பு நம்முடையதாகிறது.


நான் என்பது ஓர் ஆளுமை அல்ல. நான் என்பது ஓர் அகங்காரம் மட்டுமே. அதை உணரும்படிச் செய்தது நித்யா. அது என்னைப் பலவாக எளிதாகப் பிரித்துக் கொள்ளச் செய்தது. நான் குறைந்தபட்சம் இருவர். ஓர் எளிய லௌகீகன், கூடவே ஒர் இலக்கியவாதி. இரு ஆளுமைகள் நடுவே முரண்பாடில்லாமல் ஆக்கிக் கொள்ள கடுமையாக என்னைப் பழக்க வேண்டியிருந்தது. என் அகங்காரத்தை ஒடுக்க வேண்டியிருந்தது. முழு வெற்றியும் நிகழவில்லை. ஆனால் அது பலன் அளித்தது.


அதேசமயம் அகங்கார அழிவு என்பது ரஜோகுணத்தை இல்லாமலாக்கிவிடும். செயல்திறமையை அழிக்கும். ’நான் இதைச் செய்யவேண்டும், என்னால் முடியும்’ என்ற இச்சை [will] இல்லாமல் செயல் இல்லை. அந்த இச்சையை உருவாக்கும் அடித்தளமான அகங்காரத்தை செயல்களைச் செய்யும் கர்ம மண்டலத்தில், செயல்சூழலில், மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்றார் நித்யா.


அது எளிதல்ல. ஆனால் சாத்தியம்தான் என்பதை நான் அறிந்தேன். என் எழுத்தில் என் கருத்துக்களில் வெளிப்படும் அகங்காரம் என்பது நானே உருவாக்கிக்கொண்ட ஓர் அமைப்பு மட்டுமே. அது எனக்கு விருப்புறுதியை அளித்து என்னைத் தீவிரமாகச் செயல்படச்செய்கிறது. என் மூளையை, என் மனத்தை, என் மொழியை நானே நம்பச் செய்கிறது. என்னுடைய கருத்துக்களை முன்வைப்பதற்கான தன்னம்பிக்கை அவ்வாறு உருவாவதே. என் எழுத்துக்களில் ஒலிக்கும் நான் நான் என்னும் ஒலி அதுவே.
அகங்காரம் அடித்தளமாகக் கொண்ட என் செயல்தளத்தில் நான் முழுமையாகவே தனிமையானவன். அங்கே எனக்கு வேண்டியவர்கள் என எவரும் இல்லை. நான் நம்பும் விழுமியங்கள், இலட்சியங்கள் மட்டுமே அங்கே உண்டு.


ஆனால் நான் தனிமனிதனாக இதற்கு முற்றிலும் அப்பாற்பட்டவனாக என்னை ஆக்கிக்கொண்டேன். அங்கே முடிந்தவரை அகங்காரத்தை அழிக்க முயல்பவன். எந்தக்கூட்டத்திலும் இயல்பாக கரையக்கூடியவன். எத்தகைய மனிதர்களிடமும் சேர்ந்து பழகக் கூடியவன். ஆகவே நண்பர்கள் நிறைந்தவன். பிரியமான குடும்பம் கொண்டவன். ஒருபோதும் தனியன் அல்ல.



மூன்றாவதாக ஒரு நான் உண்டு. அது என் முழுமை நோக்கி நான் செல்லும் அந்தரங்கமான தேடல்களால் ஆனது. நித்யா தவிர எந்த மனிதரிடமும் நான் அதை முழுமையாகப் பகிர்ந்துகொண்டதில்லை. பகிரப்போவதும் இல்லை.
ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு எளிதில் என்னால் பின்வாங்க முடிவதே என்னை உற்சாகமானவனாக வைத்திருக்கிறது. என் கருத்துத்தளத்தில் நிகழும் எந்த சிக்கலும் சொந்த வாழ்க்கைக்குள் வருவதில்லை. ஒரு கணம்கூட அவற்றை நான் இங்கே கொண்டுவருவதில்லை. அது வேறு ஒருவன் என்றுதான் பலசமயம் உண்மையிலேயே தோன்றும்.



என்னைச் சந்திப்பவர்கள் எழுதும் ஆளுமைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்வதுண்டு. நண்பர்கள் அடிக்கடி அதைச்சொல்வதுண்டு. அருண்மொழியும் அஜிதனும் சைதன்யாவும்கூட அதைச் சொல்வதுண்டு. அது நான் பலகாலம் முயன்று அடைந்த ஒரு நிலை. ஒவ்வொருவருக்கும் அதையே சிபாரிசு செய்வேன். உறுதியான ஒற்றை ஆளுமையாக ஒருவர் தன்னை வைத்துக்கொண்டால் அவரை வாழ்க்கை ஏதேனும் ஒரு கட்டத்தில் பிளந்து போடும். அது இயற்கைக்கு மாறானது என்பதனால். அப்படி சிதைந்த பலரின் துயரங்களைக் கண்டிருக்கிறேன்.



கருத்துலக ஜெயமோகன் செய்யும் வேலைகளின் பொறுப்பை தனிமனித ஜெயமோகன் சுமப்பதில்லை. எழுத்து என் தன்னறம், அவ்வளவே. அது என்னால் செய்யப்படவேண்டியது என தோன்றுகிறது. செய்தால் நிறைவு கிடைக்கிறது. மற்றபடி அதன் வெற்றிதோல்விகளை, விளைவுகளை நான் பொருட்படுத்தப்போவதில்லை. அங்கே நான் வெளிப்படுத்தும் அகங்காரம் என் கடிவாளக் கட்டுக்குள் நிற்கும் ஒரு மிருகம் மட்டும்தான். ஆம், அது ஒரு பாவனை என்றே உணர்கிறேன்


No comments:

Post a Comment